செய்திகள்

25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

Makkal Kural Official

டெல்லி, ஜன. 19–

“தனது சகோதரரி ரெஹானாவும் நானும் 20-25 நிமிடங்களுக்குள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினோம் என்று, அவாமி லீக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பதிவு ஒன்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், தன்னை கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடந்ததாகவும், வெறும் 20 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பியதாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

20 நிமிடத்தில் தப்பினோம்

மேலும் அவர் கூறும்போது, கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கொதலிபாராவில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதியும் படுகொலை முயற்சி நடந்ததாகக் கூறியுள்ள அவர், தனது வீடு உட்பட அனைத்தும் எரியூட்டப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஷேக் ஹசீனா பேசும்போது, தானும், தனது சகோதரியும் வெறும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பி வந்ததாகவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *