சென்னை, ஜன.21–
ஆவடி காவல்துறை கமிஷனர் சங்கரின் அதிரடி நடவடிக்கையால் 2 நாட்களில் 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆவடி காவல்துறை ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக, கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 2 நாட்கள் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக போலீசாரால் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது.
இதில், ஆவடி காவல் மாவட்டத்தில் 17 பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
செங்குன்றம் காவல் மாவட்டத்தில், மொத்தமாக 72 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 16 ரவுடிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டும், 45 ரவுடிகள் நடத்தையின் அடிப்படையில் எச்சரித்து அனுப்பி வைத்தும், 11 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.