செய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வில் சாய்ராம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

Makkal Kural Official

மாநிலத்தில் 2வது இடம்

சென்னை, மே 9–

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி தொடர்ச்சியாக 31 ஆண்டுகளாக அனைத்து மாணவர்களும் முதல் வகுப்புக்கு மேல் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தற்போது வெளிவந்துள்ள 12ஆம் வகுப்பு தேர்விலும் தேர்வு எழுதிய 175 மாணவ, மாணவிகள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எஸ். அக்சயா என்ற மாணவி 600க்கு 598 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ஆம் இடத்திலும், பள்ளியில் முதலிடத்திலும், தமிழ், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

நந்தினி.ஏ என்ற மாணவி 600க்கு 596 மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்திலும், காமர்ஸ், அக்கவுண்டன்சி, பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

3ஆம் இடத்தில் ஹரினி.ஜே என்ற மாணவி 600க்கு 587 மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்திலும், கெமிஸ்ட்ரி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ரீனா சீர்வி .எஸ் என்ற மாணவி 600க்கு 587 மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்திலும், அக்கவுண்டன்சி, பிசினஸ் மேக்ஸ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழ் பாடத்தில் ஒருவரும், கணிதத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 14 பேரும், வேதியியல் பாடத்தில் 3 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேரும், பொருளாதார பாடத்தில் 2 பேரும், வணிகவியல் பாடத்தில் 4 பேரும், கணக்கியல் பாடத்தில் 5 பேரும், வணிக கணிதவியல் பாடத்தில் 4 பேரும் என மொத்தம் 42 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாய்ராம் கல்வி குழுமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அவந்திகா.ஏ என்ற மாணவி ஆங்கிலத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இத்தொடர் வெற்றியை தொடர்ந்து 31 ஆண்டுகளாக முயன்றால் முடியும் என்று சாதித்துக் காட்டிய சாய்ராம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், முதல்வருக்கும், அனைத்து ஆசிரிய – ஆசிரயைகளுக்கும், இதற்கு ஒத்துழைத்த பெற்றோர்களுக்கும் இந்தக் கல்வி குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சாய்பிரகாஷ் லியோமத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *