முகம் அறியா பேத்தியும் பேசி அறியாப் பாட்டியும்- ஆர். வசந்தா
வைஷ்ணவி ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாள். படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான். ஒரு ரிசர்ச் வேலைக்காக சென்னை வந்தாள். வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. வைஷ்ணவிக்கும் சென்னை வாழ்க்கை பிடித்து விட்டது. சென்னையிலேயே ஒரு வேலையும் தேடிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். சமையல் வேலை தான் செய்ய நேரம் ஒத்துப் போகவில்லை. சமையல் செய்ய ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்தாள் ஒரு பத்திரிகையில். ஒரு காலைப்பொழுது வெளியே ஒரு மூதாட்டி கதவை […]