விளிம்பு நிலை மனிதர்கள் …! – ராஜா செல்லமுத்து
அலுவலகம் செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலைக் கடந்து செல்வான் மோகன். அப்படிக் கோவிலைக் கடக்கும் போதெல்லாம் அவன் சாமி கும்பிடத் தவறுவதில்லை. சாமி கும்பிட்டு மனதிற்குள் நிறைவாக அந்த வழியாக வரும்போது அவனை ஒரு சம்பவம் தினந்தோறும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஏன் இவர்கள் இந்த வீதியில் வசிக்க வேண்டும் ?அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வளவு வயதாகாத அந்தப் பெண்மணி. நல்ல தோற்றமுடைய அந்த ஆண் மகன். இப்படி இருக்கும் இவர்களால் வாடகைக்கு ஒரு வீடு […]