தலையங்கம்
இஸ்ரேல் அறிவித்துள்ளதன்படி, அக்டோபர் 7 இல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை அவர்கள் கொன்றுவிட்டதாக அறிவித்தனர். இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் தலைமறைவான சின்வாரை இலக்காகக் கொண்டு நடத்திய 10 மாத நீண்ட தேடல் வேட்டை இப்போது முடிவடைந்துள்ளது. இதனால் இனி பாலஸ்தீன மக்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஹமாஸின் ராணுவத் தலைவராக இருந்த சின்வார், கடந்த ஆண்டில் பெரும்பாலான நேரத்தை காஸாவின் அடிப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தன் பாதுகாவலர்களுடன் கழித்திருக்கலாம் என அங்கீகரிக்கப்பட்டது. டிரோன்கள், உளவாளிகள், ஒட்டுக்கேட்பு கருவிகள் மூலமாக அவர் இருப்பிடத்தை கண்டறிய இஸ்ரேல் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில், பணயக் கைதிகள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட தெற்கு காஸாவில் உள்ள ஒரு கட்டடத்தில் சின்வாரை இஸ்ரேல் படைகள் கொன்றதாக அவர்கள் தெரிவித்தது. விரல் ரேகை மற்றும் பற்களின் அடிப்படையில் அவர் சின்வார்தான் என்று உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஹமாஸ் குழுவின் மூத்த தலைவர்கள் பலரையும் இஸ்ரேல் ஏற்கனவே கொன்றுள்ளது. ஹமாஸ் ராணுவ பிரிவின் தலைவர் முகமது டைஃப் மற்றும் ஒட்டுமொத்த தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவையும் இஸ்ரேல் இலக்காகக் கொண்டது.
ஹனியேவையின் கொலை குறித்து ஹமாஸ் இஸ்ரேலை குற்றம் சாட்டியது. சின்வாரின் உடன்பிறந்த சகோதரரும் பலர் கடத்தப்பட்டு ஐந்தாண்டுகள் சிறையில் வைக்கப்பட்டனர் என இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த கிலாட் ஷாலிட் குறிப்பிட்டார்.
சின்வாரின் கொலை ஹமாஸுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கலாம். அவர் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பதுடன், பக்கசார்பில்லாமல் செயல்பட்டார். தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, பாலஸ்தீன அதிகார அமைப்புடன் நல்லிணக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.
சின்வாரின் மரணம், இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் புதிய அத்தியாயத்துக்கான துவக்கமாகக் கருதப்படுவதால், இதனால் இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமா அல்லது பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் குறையுமா என்பதை உலகமே உற்று பார்த்துக் கொண்டு இருக்கிறது.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இஸ்ரேல் போரின் ஆரம்பக் கட்டத்தில் சின்வார் தலைமறைவானார். அவரை வதம் செய்ய இஸ்ரேல் கடந்த 10 மாதங்களாக நடத்திய தேடல் வேட்டை நிறைவு பெற்றுவிட்டதால் கோபம் தனிந்து பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றுப் பெருமா? என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டது.
டிரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை.
காஸாவில் ஏற்கெனவே ஹமாஸின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றுள்ளது.
இஸ்ரேல் கோபம் தீர்ந்ததா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.