செய்திகள்

ஹஜ் பயண ஒதுக்கீடு குறைப்பு : மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Makkal Kural Official

சென்னை, ஏப். 15–

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–

‘‘இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரைப் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துக்கிறேன்’’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *