செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Makkal Kural Official

கூடலூர், நவ. 23–

வைகை அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் 569 கன அடியில் இருந்து 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு 1183 கனஅடி நீர் வருகிறது. 3381 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2955 மி. கன அடி இருப்பு உள்ளது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 30 கன அடி.தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *