செய்திகள்

வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை உடனே அனுப்புங்கள்

Makkal Kural Official

டெலிபோனில் பேசிய மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, டிச.3–

புயல் வெள்ள சேதங்களை பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *