செய்திகள்

வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

Makkal Kural Official

சிதம்பரம், ஜன. 12–

வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை தாளாளர் ஏ.ரூபியால் ராணி மற்றும் முதல்வர் டி.நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக வீனஸ் குமார் கற்புர தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், உரி அடித்தல் போட்டி, கோலப் போட்டி ஆகியான நடைப்பெற்றது.

இவ்விழாவினை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் மற்றும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு பொங்கல் தின வாழ்த்துகளை கூறி இனிப்பு வழங்கினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *