ஒட்டாவா, பிப். 3–
விபத்தில் நினைவிழந்த பெண், கணவனை டாக்சி டிரைவர் என அழைத்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நாஷ் பிள்ளை மற்றும் ஜோகன்ஸ் ஆகியோர் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் தென்னாப்பிரிக்காவில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார். 2022 இல் விபத்து ஏற்பட்டு மீண்டபோது அவரது காதலன் மற்றும் 6 வயது குழந்தையை அவருக்கு நியாபகம் இல்லை.
கணவனின் ஒத்துழைப்பு
ஒருவர் விபத்தில் தனது அனைத்து நினைவுகளையும் இழந்துள்ளார். அவரது காதலனையே டாக்ஸி டிரைவர் என அவர் அழைத்த சம்பவம் அவருக்கு நெருங்கியவர்கள் இடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நரம்பியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாஷ் பிள்ளை மற்றும் ஜோகன்ஸ் இடையே கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது.
தற்போது நாஷ் பிள்ளை சிறிது சிறிதாக உடல் நலம் குணமடைந்து வருகிறார். தற்போது அவரது கணவரை நாஷ் பிள்ளைக்கு கொஞ்சம் அடையாளம் காண முடிகிறது. அவரது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தன்னால் குணம் அடைந்திருக்க முடியாது என்று கூறுகிறார் நாஷ் பிள்ளை. இருப்பினும் அவரது மகளை அடையாளம் காண்பதில் அவர் சிரமப்படுகிறார். இருப்பினும் தாய்மை உணர்வு தனக்கு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.