செய்திகள்

வானகரகத்தில் அப்போலோவின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையம் : அமைச்சர் மா.சுப்பிரமயிணன் துவக்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை, ஜன 30–

சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:–

‘இந்தியாவில், புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பை புரட்சிகரமாக ஆக்குவதில் அப்போலோ கேன்சர் சென்டர்கள் மற்றும் அவர்களது குழுவினர் மேற்கொண்டு வரும் தளர்வில்லாத முயற்சிகளை மனதார பாராட்டுகிறேன். வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் தொடங்கியிருப்பது புற்றுநோய்க்கு எதிரான எமது ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்பதில் ஐயமில்லை என்றார்.

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேசுகையில், ‘புற்றுநோய் என்பது உயிரை அச்சுறுத்தும் ஒரு நோயாக இருப்பதை தடுத்து, சமாளித்து வெல்லக்கூடிய ஒரு எதிர்காலத்தை உருவாக்குவது என்ற எங்களது தொலைநோக்கு திட்டத்திற்கு இணக்கமானதாக இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை செயலர் சுப்ரியா சாகு, அப்போலோ மருத்துவமனை துணை தலைவர் பிரீத்தா ரெட்டி மற்றும் நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டர்.

அப்போலோ துணை தலைவர்டாக்டர். பிரீத்தா உரையாற்றுகையில், தமிழ் நாட்டில் முதன் முறையாக எலெக்டா ஹார்மனி ப்ரோ கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப வசதியுடன் வானகரத்தில் அப்போலோ கேன்சர் சென்டர் தொடங்கப்பட்டிருப்பது இந்த பொறுப்புறுதிக்கு ஒரு நேர்த்தியான சான்றாகும். இந்த மையமானது, மேம்பட்ட நவீன புற்றுநோயியல் சிகிச்சை சேவைகளை இப்பிராந்திய மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்திருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கும், அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும் பயண நேரம் குறைந்திருப்பதோடு அவர்களின் சவுகரியம் அதிகமாக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான எங்களது 23வது மையத்தின் தொடக்கமானது, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் கிடைக்குமாறு வழங்குவதில் எங்களது நிலையான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

முழுமையான சிகிச்சையை வழங்கும் ஒரு தனித்து நிற்கும் பிரத்யேக மையமாக இது செயல்படும் என்பதே வானகரத்தில் அமைந்துள்ள அப்போலோ கேன்சர் சென்டரின் ஒரு முக்கிய அம்சமாகும். இம்மையமானது, மேம்பட்ட நோயறிதல் சேவைகளையும், அறுவைசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவைகளையும் வழங்கும். அத்துடன், ஆலோசகர்கள், உணவுமுறை நிபுணர்கள் மற்றும் பேச்சு சிகிச்சை வல்லுநர்கள் போன்ற தொடர்புடைய சிறப்பு மருத்துவ பணியாளர்களின் ஆதரவும் நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் இங்கு வழங்கப்படும் என்றார்.

#Apollo #cancercare #cancer

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *