கதைகள் சிறுகதை செய்திகள்

வலிகள் – ஜெ.மகேந்திரன்

Makkal Kural Official

‘‘குழந்தை பிரசவம்; ‘டேய்,’ தம்பி ஆட்டோவை பிடித்து வாடா; நிறைமாத கர்ப்பிணி. குழந்தை எப்படி, உள்ளே வலியால் துடிக்கிறதோ,

குழந்தை பிறந்தவுடன்,

அப்பா, தியாகு, படிடா, சொல்லிக் கொடுக்கும் பாடத்தை, நன்கு புரிந்து படிக்க மாட்டேங்கிறாய், சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்ள மாட்டேங்கிறாய், பாட, புத்தகங்களை, நன்கு கவர் போடுகிறாய், ஆனால் நன்கு படிக்க மாட்டேங்கிறாய்!’’

பென்சில், ஒழுங்காக, சீவி வைக்க மாட்டேங்கிறாய், சட்டையை, ஒழுங்காக அயன் பண்ணி வைக்க மாட்டேங்கிறாய், ‘‘நன்கு துவைத்து நல்லபடியாக, ட்ரிம்மாக வைத்துக் கொள்ள மாட்டேங்கிறாய்,’’

‘முகத்தை நன்றாக அலம்பி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

’’ தினமும் குளிக்க பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு நாள் விட்டாவது குளிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

‘வெயிலில், வெயில் படாதப்படி தொப்பியை அணிந்துக் கொள்ள வேண்டும்.’ ‘அந்த தொப்பியை துவைத்துப் போட வேண்டும்.’ ‘நல்ல காலணியை பராமரித்து போட்டுக் கொள்ள வேண்டும்.’

‘ரோட்டில் நடக்கும் போது, இந்தப் பக்கம், அந்தப் பக்கம் பார்த்து, நின்று வண்டி சென்றபின், சாலையை கடக்க வேண்டும்.’ இப்படியெல்லாம் செய்ய வேண்டும். கண்காணிப்பு அப்பாவுக்கு இப்படி பல வலிகள்.

‘தியாகு அப்பா சொன்னதை கடினப்பட்டு, புரிந்து பள்ளிப் படிப்பை முடித்தான். அடுத்து, கல்லூரி வீட்டில் நண்பர்களை வரவழைத்து ஒரே அரட்டை.

அப்பா ‘‘தியாகு படித்து ஒன்னும் புரயோஜனம் இல்லை. ‘ஒழுக்கம் முக்கியம்.’ ‘தெரிஞ்சதா’ ‘‘அப்பா ரகுராமன் பேச்சை கேட்கவில்லை. கல்லூரி படிப்பை முடித்து அடுத்து, அப்பாவுக்கு மீண்டும் வலி.

அடுத்த வலியும் காத்திருந்தது. ‘வேலைக்கு சென்றான்.

அங்கு சரிவர வேலை செய்வதில்லை. M.D. ஒரே கம்ப்ளைண்ட். பையன் தியாகு, கான்ஸ்ட்ரேட் பண்ணி, வேலை செய்யமாட்டேங்கிறான், அப்பா ரகுராமனுக்கு மனம் என்ன பையன் தியாகு இப்படி என; என்னடா M.D. பேச்சை கேளுடா,’’ ‘‘சரிப்பா,’’ ஆனால் அவன் பாட்டுக்கு இருந்தான்.

சரி, பையனுக்கு கால் கட்டுப் போட்டால், திருந்துவான் என கல்யாணம் முடித்தார். ‘‘மனைவியிடம் சரியாக மனம் விட்டு பேசுவதில்லை ரகுராமன்.

‘‘ஒரு பெண்ணின் வாழ்வை சீரழித்து விட்டோமே’’ என மனம் கொதித்தார். ‘‘தியாகுவை கூப்பிட்டு இப்படியெல்லாம், இருக்கக் கூடாது. பெண் மனம் லேசானது; பூவைப் போல இருக்கும், புரிஞ்சதா?’’ இவன் சட்டை செய்யவில்லை.

தியாகு மனைவி இவனை விட்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார் பரிமளா.

ஒரு நாள்; டென்ஷனில் தியாகு சாலையை கடக்கும் போது; விபத்து; விபத்தில் சிகிச்சை பிரயோஜனமின்றி தியாகு இறக்கிறார்.

ரகுராமனுக்கு வலி. வாழ்க்கையில், வலிகளையே கண்ட ரகுராமன், தியாகு பிரசவம் ஆன போது, அதிக ரத்தப்போக்கு வந்து இறந்த தன் மனைவியை நினைத்துக் கொண்டார். வலியாக இருந்தாலும் சற்று ஆறுதல் அடைந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *