சென்னை, நவ. 10–
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1-வது நிலையின் 3-வது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. நேற்று 1-வது அலகிலும் இன்று 3-வது அலகிலும் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.