செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

Makkal Kural Official

ராமேஸ்வரம், டிச. 10:

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. மணிக்கு சுமார் 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை கடல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதே போல், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களிலிருந்து நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதே போல், பாம்பன் பகுதியிலும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *