செய்திகள்

ராஜபக்சே மகன் கைது

Makkal Kural Official

கொழும்பு, ஜன. 26–

சொத்துக்குவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்ச, இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச. விளையாட்டு வீரரான இவர், இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் யோஷித ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புவில் உள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திலும் இது தொடர்பாக யோஷித ராஜபக்ச விசாரணைக்கு ஆஜரானார்.

யோஷித ராஜபக்ச கைது

இந்நிலையில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் யோஷித ராஜபக்சவை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாந்தோட்டை மாவட்டம் பெலியத்தில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைச் சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்களை முன்வைத்து, யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பாக அண்மையில் சிஐடி விசாரணை மேற்கொண்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *