செய்திகள்

யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: காஞ்சிபுரம் போலீஸார் நடவடிக்கை

காஞ்சிபுரம், செப். 19–

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். யூடியூபர் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை -– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட முயன்ற அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் போலீசார். வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *