செய்திகள்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

Makkal Kural Official

சென்னை, நவ. 14–

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம், வீட்டில் வழுக்கி விழுந்ததில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தோள்பட்டையில் எலும்பு கூடியதால், அறுவைசிகிச்சை செய்து வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

–––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *