செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ 1.11 கோடி உண்டியல் வசூல்

செஞ்சி, பிப். 23–

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அம்மாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த அமாவாசை விழாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

தை மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாதந்தோறும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணுவது வழக்கம்.

அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 11 லட்சத்தி 96 ஆயிரத்து 281ரூபாய் ரொக்கமும், 442 கிராம் தங்க நகைகளும், 1405 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருவக்கரை செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆய்வாளர்கள் சங்கீதா, தினேஷ், கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *