தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது
சென்னை, ஏப். 18–
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை சில தினங்களுக்கு முன்பு தொட்டது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை, கடந்த 12 ந்தேதி ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770 க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.200 உயர்வு
பின்னர் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்ததாலும் சவரன் ஒன்றின் விலை ரூ.69 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் என்கிற அளவில் விற்கப்படுகிறது அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.105 ரூபாய் உயர்ந்து ரூ.8,920க்கும், ரூ.840 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.18) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.110 க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000 க்கும் விற்பனையாகிறது.
மிக மிக வருத்தமாக இருக்கிறது. தங்கத்தின்விலை எப்படி இப்படி யார்காரணம்?