செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு:

Makkal Kural Official

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, ஏப்.26-

”மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது:

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது. தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ரூ. 98 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும். ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *