செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நொடிக்கு 6,384 கன அடியாக உயர்வு

Makkal Kural Official

மேட்டூர், டிச. 13–

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,384 கன அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,621 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 4,727 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.31 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 89.24 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *