அணைக்கு நீர்வரத்து 20,200 கன அடி
மேட்டூர், நவ. 14–
மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 20, 200 கன அடியாக உள்ள நிலையில், 34 வது நாளாக முழு கொள்ளளவான 120 அடியுடன் உள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20,200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.