செய்திகள் நாடும் நடப்பும்

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Makkal Kural Official

புதுடெல்லி, மே 10–

பாகிஸ்தான் உடன் போர் பதட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி, இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் ஆலோசனை நடத்தினார்.

எல்லையில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அனில் சவுஹான் விளக்கிக் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி ஆலோசனை

இதைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று தன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் அத்துமீறலை அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த உதவுவதாக அமெரிக்கா கூறி உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக எல்லையில் நிலவும் போர் பதற்றம் குறித்து, டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்து வருவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *