செய்திகள்

முதியோர் நாடாக மாறும் தென்கொரியா: 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்

Makkal Kural Official

சியோல், டிச. 25–

தென்கொரியா முதியோர் நாடாக மாறுவதாகவும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தென் கொரிய மக்கள் தொகை 5.17 கோடி ஆகும். தற்போது தென் கொரியா முதியோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்’ ஆவார்கள்.

இது குறித்து உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் விவரம் வருமாறு: தென் கொரியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.024 கோடியாக உள்ளது. இது மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதேபோல், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.

தற்போது நிலவரப்படி, 65 வயது மேற்பட்ட பெண்கள் 22 சதவீதம். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது 65 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 7 சதவீதத்துக்கும் அதிகமானவர் இருக்கும் நாடுகளை வயது முதிரும் சமூகம் என்றும், 14 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களை வயதான சமூகம் என்றும், 20 சதவீதத்துகு மேல் உள்ளவர்களை அதிக வயதானவர் சமூகம் என்றும் அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *