செய்திகள்

‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

Makkal Kural Official

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு :

சென்னை, ஏப். 20–

2025–ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு இணையதளம் மூலம் மே 3–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 – ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

2025–ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.8.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

* 15 வயது முதுல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2024 (1.4.2024) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2025 (31.3.2025) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

* கடந்த நிதியாண்டில் (2024 – 2025) அதாவது 1.4.2024 முதல் 31.3.2025வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).

* விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

* விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in<http://www.sdat.tn.gov.in>) உள்ளது.ஆன்லைன் மூலம்மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 3.4.2025 முதல் கடைசி நாள் 3.5.2025 அன்று மாலை 4 மணி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை- என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசிஎண். 7401703480 (அல்லது) 044-26644794 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *