1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு, அதாவது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை டெல்லி செங்கோட்டையில் இந்நாளில் தொடங்கியது. 82 வயதான பேரரசர் மீது தேசத்துரோகம், சதித்திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டார். இந்த நிகழ்வு பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய முகலாய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ முடிவாகவும், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்கு வழிவகுத்த முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
பகதூர் ஷா ஜாபர் ஒரு அரசராக மட்டுமல்லாமல், சிறந்த உருது கவிஞர் மற்றும் சூஃபி சிந்தனையாளராகவும் புகழ்பெற்றவர். “ஜாபர்” என்ற புனைப்பெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். அவரது கவிதைகளில் துயரம், தத்துவம், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை ஆகியவை வெளிப்படுகின்றன.
ரங்கூனில் அவர் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்க்கையை முடித்தார். தனது தாய்நாட்டில் அடக்கம் செய்யப்பட கூடாது என்ற நிலை ஏற்பட்டது என்பது, இந்திய வரலாற்றில் ஒரு பெரிய துயரக் குறிப்பாக பார்க்கப்படுகிறது.
![]()





