செய்திகள்

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம்

Makkal Kural Official

ராமேஸ்வரம், ஜன. 26–

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடாவடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசை படகுகளின் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யும் நிகழ்வு அவ்வப்போது அரங்கேறி வருகின்றது.

33 பேர் கைது

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க படகின் மூலம் கடலுக்குச் சென்றார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 33 பேரையும் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இரண்டு படகின் மூலம் சென்ற 18 மீனவர்களும் இன்று அதிகாலை ஒரு படகின் மூலம் சென்ற 15 மீனவர்கள் என மொத்தம் 33 பேரை சிறைபிடித்து வைத்துள்ளனர். அடிக்கடி இவர்கள் மீனவர்களை சிறைபிடித்து வைப்பதாகவும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் மட்டுமே மீனவர்களை கைது செய்ய வேண்டும். ஆனால் இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகை பார்த்த உடனே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யும் சூழலும் அவ்வப்போது நிகழ்வதாகவும், அதனை இந்திய ஒன்றிய அரசு தடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *