செய்திகள்

மீஞ்சூர்‌ சந்திரபிரபு ஜெயின்‌ கல்லூரியில்‌ பொங்கல்‌ விழா

Makkal Kural Official

மீஞ்சூர், ஜன.16–

மீஞ்சூர்‌ சந்திரபிரபு ஜெயின்‌ கல்லூரியில்‌ பொங்கல்‌ விழா கொண்டாடப்பட்டது. அதில்‌ மாணவர்கள்‌ பேராசிரியர்கள்‌ பாரம்பரிய உடைகளுடன்‌ பங்கேற்றனர்‌. முன்னதாகக்‌ கல்லூரி வளாகத்தில்‌ புதுப்பானையில்‌ மஞ்சள்‌ கிழங்குடன்‌ மாவிலை தோரணங்கள்‌ கட்டி, செங்கரும்பும்‌ கனிவகை களுடன்‌ பச்சரிசிப்‌ பனை வெல்லப்‌ பொங்கல்‌ படைக்கப்பட்டது. விழாவின்‌ தொடக்கமாகக்‌ கல்லூரி முதல்வர்‌ நா.சுஜாதா பொங்கல்‌

விழாவினைத்‌ துவங்கிவைத்து, சிறப்பு விருந்தினர்களான கல்லூரிச்‌ செயலாளர்‌ லலித்குமார்‌ ஓ ஜெயின்‌. கல்லூரித்‌ தலைவர்‌ நேமிச்சந்த்‌ எச்‌. கட்டாரியா ஆகியோரை வரவேற்றதுடன்‌ சூரியனையும்‌ இயற்கையையும்‌ வழிபட்ட பின்பு, இத்தகை பண்பாட்டு நிகழ்வுகள்‌ மனித வாழ்கையில்‌ முக்கியமானவை என எடுத்துக்‌ கூறினார்‌. தொடர்ந்து இருபால்‌ மாணவர்களின்‌ ஆடல்‌ பாடலுடன்‌ நடந்தது.

இவ்விழாவில்‌ உரியடித்தல்‌, பம்பரம்‌ விடுதல்‌, கபடி, ஆகியவை மாணவர்கள்‌ விளையாட பாண்டி, பல்லாங்குழி, கோ கோ, கயிறு இழுத்தல்‌ ஆகிய விளையாட்டுகள்‌ மாணவிகள்‌ விளையாடினர்‌. விழாவில்‌ காளைகளுடன்‌ மாட்டு வண்டியும்‌ மாணவர்களின்‌ சிறு அங்காடிகள்‌ இடம்பெற்றிருந்தது. வேதியியல்‌ துறைத்‌ தலைவர்‌ ப.பவானி நன்றி கூறினார்.

–––––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *