செய்திகள்

மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு: மின்சார வாரியம் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஏப்.21

மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மின் மீட்டரை கணக்கெடுக்க ரூ.4-ம், கிராமப்புறம், மலைப்பகுதியாக இருந்தால் ரூ.6-ம் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று மின் கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, அவர்களுக்கான ஊதியத்தை மின் வாரியம் உயர்த்தி உள்ளது. அதன்படி, மின் மீட்டர் ஒன்றை கணக்கெடுக்க ரூ.5-ம், அது கிராமம் அல்லது மலைப்பகுதியாக இருந்தால் ரூ.7-ம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *