செய்திகள் நாடும் நடப்பும்

மார்கழி சுவரங்கள்!

Makkal Kural Official

ஆர்.முத்துக்குமார்


சென்னையில்‌ ஆண்டின்‌ பெரும்‌ பகுதி நாட்களில்‌ வியர்க்க வைக்கும்‌ வெயில்‌ தான்‌. ஆனால்‌ ஆண்டின் நிறைவு மாதத்தை எட்டும்போது மட்டும்‌, சற்றே சுகமான குளிர்‌ தென்படுகிறது. ஸ்வெட்டர்‌ தேவையில்லை. ஆனாலும்‌ மார்கழி குளிரில்‌ சுடவைத்த தண்ணீர்‌ பெரும்பான்மையோருக்கு அவசியம்‌ தேவைப்படுகிறது!

அதுபோன்றே குத்துப்பாட்டு, அபரீத இசை கொண்ட சினிமா பாட்டுகள்‌ என்று அதிர்ந்து கொண்டிருக்கும்‌.

சென்னையில்‌ மார்கழி வந்தவுடன்‌ ரம்மியமான, மனதுக்கு இதமான பாரம்பரிய கர்நாடக சங்கீதம்‌ சென்னை சபாக்களில்‌ ரீங்காரமிடும்‌. அங்கு தேன்‌ அருந்த பூ நோக்கி கூட்டம்‌ கூட்டமாய்‌ குவியும்‌ தேனீக்கள்‌ போல்‌ இசை ரசிகர்களும்‌ கூடுகின்றனர்‌.

உலகத்தில்‌ ஒரு சமயத்தில்‌ இத்தனை இசை நிகழ்ச்சிகள்‌ ஆண்டுதோறும்‌ நடக்குமா? என்று பலரும்‌ வியக்கிறார்கள்‌! அதுபோன்றே சபாக்கள்‌ கூடிக்கொண்டுதான்‌ இருக்கிறது. கூடுதல்‌ நிகழ்ச்சிகளும்‌ ரசிகர்களின்‌ பசிக்கு விருந்து அளிக்கிறது.

ஆனால்‌, ரசிகர்கள்‌ வட்டம்‌ பெருகுகிறதா? அது பெரும்‌ கேள்விக்‌ குறிதான்‌.

இந்த ஆண்டு டிசம்பர்‌ மாத இசைக் காலண்டர்‌ பட்டியலை பார்த்தால்‌ சீனியர்கள்‌, ஜூனியர்கள்‌ என்று பலதரப்பட்ட கலைஞர்கள்‌ சங்கீத மழை பொழிய இருப்பதை காண முடிகிறது. இவை மார்கழி இசை விழாவின்‌ அமர்க்களமான அடையாளங்கள்‌.

இவ்வாறாக சங்கீத மும்மூர்த்திகள்‌ ஏற்றி வைத்த கர்நாடக இசை விளக்கு பிரகாசமாக சுடர்விட்டு, பிரகாசித்துக்‌ கொண்டே இருக்கிறது; போற்றிப்‌ பாதுகாக்கப்படுகிறது.

உச்ச அந்தஸ்து கொண்ட இசை விற்பன்னர்கள்‌, தங்களுக்கு வரும்‌ பெரும்‌ கூட்டம்‌ பற்றி பூரிக்கிறார்கள்‌. அதனால்‌ பெரிய ஹால்களில்‌ மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்‌ கொள்கிறார்கள்‌. ஆகவே அவர்களது நிகழ்ச்சி பட்டியலில்‌ மிகக்‌ குறைவான நிகழ்ச்சிகள்தான்‌ உள்ளது. ஆனால்‌ ரசிகர்‌ வட்டம்‌ விரும்பி குறித்து வைத்திருக்கும்‌ முக்கிய நிகழ்ச்சி அவர்களுடையது தான்‌.

ரசிகர்களின்‌ எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த விற்பன்னர்கள்‌ தங்கள்‌ சாமர்த்தியத்தால்‌, ரசிகர்களின்‌ எதிர்பார்ப்பை விடவும்‌ சற்று கூடுதலாகவே கச்சேரிகளில்‌ வழங்கி திருப்தியான சந்தோசம்‌ வழங்கி விடுகின்றனர்‌.

வளரும்‌ கலைஞர்கள்‌ கூட கர்நாடக இசையை ரசிக்கும்‌ ரசிகர்களின்‌ எதிர்பார்ப்புக்கேற்ப, துல்லியமான.

தவறுகள்‌ இல்லாத கச்சேரிகள்‌ வழங்க பிரியப்பட்டு கடுமையான பயிற்சியில்‌ ஈடுபட்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்‌ கொள்ள தயாராகி விடுகின்றனர்‌.

அவர்களின்‌ கடும்‌ உழைப்புக்கு பலன்‌ கிடைத்ததா? என்பது, அடுத்த ஆண்டு கச்சேரி பட்டியலில்‌ அவர்களுக்கு கிடைக்கும்‌ அதிகப்படி கச்சேரியே அதற்கான நல்ல தீர்ப்பு!

எது எப்படியோ தற்போது பாரம்பரிய கர்நாடக இசையை விரும்பும்‌ ரசிகர்களுடன்‌ ஜனரஞ்சக ரசிகர்களையும்‌ இக்கச்சேரிகளுக்கு ஈர்க்க தமிழ்‌ பாடல்கள்‌ அதிகரித்து வருவதும்‌ தெரிகிறது.

அதே சமயம்‌ இசை உலகில்‌ ரசிகர்களின்‌ வரவேற்பு ராப்‌, ராக்‌, ஹிப்‌-ஹாப்‌ என்று அயல்நாட்டுத்தனமான

இசைக்கு அதிகரித்து விட்டது. அவர்கள்‌ பாரம்பரிய இசையை கேட்க ஆர்வம்‌ இல்லை என்று தள்ளி நின்று

விடுகின்றனர்‌.

ஆனால்‌ உண்மையில்‌, இப்படிப்பட்ட ராக்‌, ராப்‌ வாழ்வியல்‌ கொண்ட அயல்‌ நாட்டினரும்‌ மற்றும்‌

அங்கே உள்ள வெளிநாட்டு. இந்தியர்களும்‌, டிசம்பர்‌ மாத மார்கழியில்‌ பாரம்பரிய, சுத்தமான கர்நாடக இசையை ரசிக்க மிக ஆவலாக சென்னை வந்து விடுகின்றனர்‌.

பல வெளிநாட்டு கலைஞர்கள்‌ இந்த இசை கச்சேரிகளில்‌ மேடை ஏறுவதும்‌ சர்வசாதாரணமாகிவிட்டது. வெளிநாட்டு வாழ்‌ இந்தியர்கள்‌ மட்டுமின்றி, பல வெளிநாட்டவர்களே பக்க வாத்தியக்காரர்களாகவும்‌, பாடகர்களாகவும்‌ இருப்பது புதுமை!

இப்படியாக டிசம்பர்‌ சீசனில்‌ நம்ம ஊர்‌ கலைஞர்களுக்கு, வெளிநாட்டு கலைஞர்களின்‌ போட்டியும்‌ வர ஆரம்பித்துவிட்டதால்‌, சுருதி தவறாமல்‌, அழுத்தம்‌ திருத்தமாக கச்சேரிகள்‌ வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம்‌ அதிகரித்துவிட்டது. சரியான போட்டி என்று ரசிகர்கள்‌ மகிழத்தான்‌ செய்கிறார்கள்‌.

ஆக மொத்தம்‌, மார்கழி இசை விழா சென்னைக்கு அழகூட்டுகிறது

அது மட்டுமா? இந்த 30 நாட்களில் சுற்றுலா பொருளாதாரம் ரூ. 10 கோடியை தாண்டி விடுகிறதாம்?

நமது கடற்கரை உலக பிரசித்தி பெற்றது. மாமல்லபுரத்தின்‌ சிலைகள்‌, புராதன கோயில்கள்‌ சுற்றுலா பயணிகளை கவரும்‌ ஈர்ப்பு. இவற்றோடு இந்த இசை மாதம்‌ சுற்றுலா பயணியர்‌ வருகையில்‌ உச்சமாகும்‌. ”

இசைக்கு மொழி இல்லை என்பார்கள்‌. அதுபோன்றே, மார்கழி இசை உற்சவ காலத்தில்‌ சென்னையில்‌ எல்லா

மொழியினரும்‌, பலதரப்பட்ட மொழிகளில்‌ பாடினாலும்‌ இசை என்ற அந்த உன்னதம்‌ எல்லோரையும்‌ ஒன்றாக்கி, கூட்டாக ரசிக்க வைக்கிறது.

தொடரட்டும்‌ இந்த பாரம்பரியம்‌ என்று வாழ்த்துவோம்‌, அது தொடர நம்மால்‌ ஆன உதவியையும்‌ வழங்கியே

ஆக வேண்டும்‌!

மொழி வெறுப்பின்றி, விழியை திறந்து வைத்துவிட்ட மார்கழி மாத சீசன்‌, சென்னைக்கு மணி மகுடம், தற்போது துவங்கிவிட்ட சீசன்‌, சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இசையால்‌ நம்‌ அகமும்‌, அரங்கமும்‌ நிரம்பட்டும்‌!

Loading

One Reply to “மார்கழி சுவரங்கள்!

  1. a good article covering points that has raised in the writers mind. chillness is for december so as kutchery for music lovers. sabhas with music and 0utside catering people catches the show

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *