செய்திகள்

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழிப்பு

Makkal Kural Official

மானாமதுரை, பிப். 2–

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள கிராம மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. கடந்த 27–ந் தேதி 2 ஆண், பெண் ஆசிரியர்கள் அறைகளில் இருந்த நோட்டு, புத்தகங்கள், பொருட்கள் மற்றும் ஆவணங்களை சூறையாடிய சமூக விரோதிகள் அறையில் உள்ள டேபிள் உள்பக்கத்திலும், அறையிலும் மலம் கழித்து சென்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சமூகவிரோதிகள் சிலர் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இதுபோன்ற அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *