செய்திகள்

மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரை தவிர வேறு யாரும் இயக்கக்கூடாது

போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை, பிப்.1–

மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக்கூடாது என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்குவதாக தெரிய வருகிறது. மத்திய பணிமனையில் 28.1.2023 அன்று நடத்துநர், ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீசல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது.

எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது. கிளை மேலாளர்கள் மற்றும் பணியில் உள்ள மேற்பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.

கிளை மேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கும் வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *