செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஜன. 5–

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி செய்ய தடை.

மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.

வளாகத்தில் வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்த தடை. அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கக்கூடாது.

பல்கலைக்கழக வளாகத்தில் சிசிவிடி கேமரா, மின்விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் வாகனம் கண்டறியப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *