சென்னை, ஏப் 9–
ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8–ந் தேதி) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.