செய்திகள்

மன்மோகன் சிங் மறைவு : கைகளில் கருப்புப் பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மரியாதை

Makkal Kural Official

சிட்னி, டிச. 27–

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

கைகளில் கருப்புப்பட்டை

இரு அணிகளுக்கும் இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் 2 ஆம் நாளான இன்று தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி மொத்தம் 474 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து, 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், 2 ஆம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை கட்டி விளையாடி வருகின்றனர். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *