செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

Makkal Kural Official

போபால், செப். 7–

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மற்றொரு நகரமான ஜபல்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் ‘இந்தூர்-ஜபல்பூர்’ விரைவு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டன. ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது இந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். எனினும் அந்த வழித்தடத்தில் ரெயில்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

2 பெட்டிகள் தடம் புரண்டது

இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் ‘இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) 2 பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 வது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

மேலும் ரெயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *