ராய்ப்பூர், நவ.5-–
மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020–-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
சத்தீஷ்காரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-–
80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம். தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும், சூதாட்ட செயலி ஊழலில் சிக்கியிருக்கும் சத்தீஷ்கார் முதலமைச்சரையும் கடுமையாக சாடினார்.
ச்
பிரதமர் மோடி அறிவிப்பு
–––––––––––––––––––––––––––––––
ராய்ப்பூர், நவ.5-–
மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020–-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
சத்தீஷ்காரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-–
80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம். தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும், சூதாட்ட செயலி ஊழலில் சிக்கியிருக்கும் சத்தீஷ்கார் முதலமைச்சரையும் கடுமையாக சாடினார்.