செய்திகள்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

Makkal Kural Official

விழுப்புரம், ஜன. 5–

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார்.

நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் சென்ற கட்சியினர், அவரை உடனடியாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று சென்னை மத்திய மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் செல்வா என்பவரும் நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடசேன் எம்.பி.யை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *