செய்திகள்

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்; போராட்டத்தை கைவிட மாட்டேன்: கமலா ஹாரீஸ் பேச்சு

Makkal Kural Official

நியூயார்க், நவ. 07–

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் மிக அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும், இன்னும் ஒரு சில நாட்களில் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அனைத்து கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனை அடுத்து, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

போராட்டத்தை கைவிட மாட்டேன்

மேலும் வெற்றி பெற்ற டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன், ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடியுள்ளார். அதிபர் டிரம்பின் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த எதிர்நோக்கி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எரிசக்தி மற்றும் விண்வெளி துறைகளிலும் நெருக்கமாக இணைந்து இருவரும் பணியாற்றுவோம் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *