செய்திகள்

‘‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’’

Makkal Kural Official

சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் : இன்று காலை வணிகர் சங்க பேரமைப்பு இளைஞர் அணி நடத்தியது

சென்னை, ஏப் 19–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான சென்னை மாநகர இளைஞர் அணி சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தமிழக இளைஞர்களிடம் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து, இன்று (19–ம் தேதி) காலை 5.30 மணியளவில் சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப்ராஜா தலைமையில் சென்னை, பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாளர்களாக பங்கேற்று, விழிப்புணர்வு மாரத்தான் தொடங்கி வைத்தார்கள்.

தென்சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.ஜெ.மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஐ.பால்ஆசீர், இரா.க.சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரை வழங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், மற்றும் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மண்டலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் அனைவருக்கும் டீ ஷர்ட், பேக், கேப், தண்ணீர் பட்டால், பிஸ்கட், செடி போன்றவை வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *