செய்திகள்

பொது மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் செல்போன் மூலம் காலி இடங்களை அறிய வசதி

சென்னை, மே.6-

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக வருகிற 8-ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்கி இந்த மாதம் இறுதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும் ஆசிரியர்களுக்கு காலி இடங்கள் குறித்த விவரங்களை அவர்கள் இருந்த இடங்களிலேயே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக புதிய வசதியை கல்வித் துறை கொண்டு வந்து இருக்கிறது.

அதன்படி, இட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் 12 இடங்கள் வரை தேர்வு செய்ய முடியும். அந்த இடங்கள் கலந்தாய்வு தொடங்கியதில் இருந்து எவ்வாறு நிரம்பி வருகிறது. தேர்வு செய்ததில் எந்தெந்த இடங்கள் காலியாக இருக்கின்றன? என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கேற்றாற்போல், கலந்தாய்வு நடத்தப்பட உள்ள கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதள பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *