செய்திகள்

பொதுமக்கள் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை: கமிஷனர் அருண் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, மே 15–

சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 31 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் ஆ.அருண் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கமிஷனர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 31 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர் (நலன் மற்றும் எஸ்டேட்) டி.என்.ஹரிகிரன் பிரசாத் உடன் இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *