சென்னை, டிச. 30–
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள கடிதத்தில், “‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே.
அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.