சென்னை, ஜூலை 30–
புலிகளின் இடத்தைப் பேணிக்காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூலை 29-ம் தேதி – உலக புலிகள் நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
உலகப் புலிகள் நாளில், சிறப்புமிகு உயிரினமான நம் புலிகளின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்போம்! அருகிவரும் உயிரினமான புலிகளைக் காப்பதற்கான தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சிகள் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 306 ஆக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து கானகத்தில் புலிகளின் இடத்தைப் பேணிக் காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.