கதைகள் சிறுகதை செய்திகள்

புரிந்ததா? – மு.வெ.சம்பத்

Makkal Kural Official

அமுதன் அகிலாவிற்கு ஒரே ஒரு பையன். ஆனந்தன் என்று பெயர். அவனுக்கு கல்யாணம் செய்ய அமுதன் மற்றும் அகிலா பெண் பார்க்கத் தொடங்கினார்கள்.

அமுதன் தன் நண்பர்கள் மூலமும் தனது சகோதரன் அமரேசன் மூலமும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமரேசன் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தார்.

அன்று காலையில் வந்த அமரேசன் அமுதனிடம் பக்கத்து ஊரில் தனது நண்பனுக்குத் தெரிந்தவருக்கு திருமண வயதில் பெண் இருக்கின்றாளாம். நண்பன் அவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார். நாளை தகவல் வந்ததும் சொல்கிறேன் என்றதும் அமுதன் நல்ல விதமாக முடிந்தால் நல்லது என்றார்.

அடுத்த இரண்டு நாட்களில் அமரேசன் வந்து அமுதனிடம் ஆனந்தன் ஜாதகம் வாங்கிக் கொண்டு சென்றார். நண்பனிடம் கொடுத்த அமரேசன் சில விவரங்களைக் கூறினார். அதை மனதில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். பத்து நாட்கள் கழித்து அமரேசன் அவர் நண்பரை நினைவு படுத்த அவர் நாளை செல்வதாகக் கூறினார். அமரேசன் நண்பனிடமிருந்து பதிலேதும் வராததாலும் அமுதன் என்னாச்சு என்று கேட்டதாலும் நண்பன் வீட்டிற்குச் சென்றார் அமரேசன்.

நண்பனின் மனைவி அமரேசனை வரவேற்று அமரச் செய்து விட்டு அவரிடம் தனது கணவர் அவசர அலுவல வேலையாக வெளியூர் சென்றதாகக் கூற அமரேசன் எப்போது வருவாரெனக் கேட்டார்.

அதற்கு முன் நண்பனின் மனைவி,நேற்று அவர் உங்கள் சகோதரன் பையன் திருமண விஷயமாக நீங்கள் வந்தால் நான் நாளை மறுநாள் வந்து அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார் என்றார்.

சரியென கிளம்ப தயாரான அமரேசனுக்கு சிற்றுண்டி தேநீர் தந்து தான் அனுப்பினார் நண்பனின் மனைவி. அமரேசன் மிகவும் மகிழ்வுடன் நன்றி சொல்லி விடைபெற்றார்.

அமரேசன் தனது நண்பருடன் அவரது நண்பர் வீட்டிற்குச் சென்று அவரைக் கலந்து பேசி பெண்ணின் ஜாதகத்தை வாங்கி வந்தார். ஆனந்தன் ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தார். அமரேசன் அமுதனிடம் வந்து தந்து விட்டு ஆக வேண்டியதைப் பார்க்கச் சொன்னார். ஆனந்தனிடம் அமுதன் கலந்து ஆலோசித்து அமரேசன் மூலம் ஒரு நல்ல நாள் பார்த்து பெண் பார்க்கச் சென்றார்கள். அந்த பெண்ணை ஆனந்தன் உட்பட எல்லோருக்கும் பிடித்து விட சம்மதம் சொல்லி விட்டு வந்தார்கள்.

அமுதன் அமரேசனிடம் என்னப்பா இன்றோடு பத்து நாட்கள் ஆகி விட்டது அவர்கள் ஒன்றுமே கூறவில்லையே எனக் கூற அமரேசன் நான் சென்று பார்த்து விட்டு வரவா என்றதற்கு அமுதன் கொஞ்சம் அவகாசம் தருவோம் என்றார்.

அமரேசன் அன்று கடைத் தெருவில் பெண்ணின் தந்தை ராமசாமியைச் சந்தித்தார். அமரேசன் ஐயா என்ன ஏதும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்க ராமசாமி இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு வருகிறேன் என்றார். அமரேசன் நல்லது என்று கூறி விட்டு நகர்ந்தார்.

அமுதனிடம் அமரேசன் தான் ராமசாமியை சந்தித்ததாகவும் அவர் விரைவில் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியதை கூறினார். அமுதன் சரி காத்திருப்போம் என்றார். அமரேசன் அமுதனிடம் சீக்கிரம் நல்ல காரியம் நடக்கட்டும் என்றார்.

ராமசாமி அமுதன் வீட்டிற்கு வந்தார். வந்ததும் சிலவற்றைப் பேசிவிட்டு தான் அழைத்து வந்ததிருந்த நபரிடம் நல்ல நாட்களாக அவர் குறித்துக் கொடுத்த தேதிகளை அமுதனிடம் கூற, அமுதன் இரண்டு நாளில் முடிவு செய்து கூறுவதாகக் கூறினார்.

அமுதன் ராமசாமியைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு உகந்த நாட்கள் இவை என்று இரண்டு நாட்களைச் சொன்னார். இதில் நீங்கள் உங்கள் குடும்பத்தாரைக்

கலந்து கொண்டு சொல்லுங்கள் என்றார். ராமசாமி தனது குடும்பத்தாரைக் கலந்து கொண்டு ஒரு தேதியைக் கூற,அமுதன் அந்தத் தேதியை நிச்சயம் செய்தார். பத்திரிகையை இந்தத் தேதியில் இருவீட்டார் அழைப்பாக தயார் செய்யுங்கள் என்றார்.

அன்று வீட்டிற்கு வந்த ராமசாமி திருமணப் பத்திரிகை மாதிரியைக் காட்ட, அமரேசன் சரியாக உள்ளது என்றார். அமுதன் வாங்கிப் பார்த்து விட்டு என்ன ஒரு தவறு உள்ளதே. உனது கண்ணுக்குத் தெரியவில்லையா என்று சுட்டிக் காட்ட, அமரேசன் அண்ணா அது சரியாகத் தானே உள்ளது என்று மறுபடியும் கூற, அமுதன் என்னப்பா சரியென்று கூறுகிறாயே என்றார்.

அமுதன் ராமசாமியுடன் வந்தவரிடம் ஐயா, நீங்களே பாருங்கள் என்று சொல்ல,அவரும் பார்த்து விட்டு சரியாகத் தானே உள்ளது என்றார்.

உடனே அமுதன் என்ன ஐயா நீங்களும் சரியென்று சொல்லுகிறீர்கள் என்றார். பையன் பெயருக்கு முன் உள்ள வாசகம் திருநிறைச் செல்வன் என்றுள்ளது, பெண் பெயருக்கு முன்னாள் திருவளர்ச் செல்வி என்று உள்ளதே என்றார்.

அமரேசன் அண்ணா

திருநிறைச் செல்வன் என்றால் உங்கள் குடும்பத்தில் இனிமேல் திருமணத்திற்கு வேறு யாருமில்லை என்று அர்த்தம்.

திருவளர்ச்செல்வி என்றால் இன்னும் திருமணத்திற்கு வீட்டில் பெண் உள்ளது என்று அர்த்தம் என்றார்.

அங்கிருந்த அனைவரும் ஆமாம் எனச் சொல்ல, அமுதனிடம் அமரேசன் புரிந்ததா எனக் கேட்க, அமுதன் புன்சிரிப்புடன் சரி சரியென்றார். அட இது தெரியாமல் போனோமே என்று மனதிற்குள் நினைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *