கடலூர், டிச. 7–
புதுச்சேரி -– கடலூர் சாலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
வங்கக்கடலில் நிலவிய ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரி – கடலூரை இணைக்கும் சாலை பழுதடைந்தது. மேலும் கனமழையால் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள இடையார்பாளைய மேம்பாலம் பழுதடைந்த நிலையில், மக்களின் பாதுகாப்புக் கருதி கடந்த மூன்று நாள்களாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இரவு பகலாக பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தநிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.