செய்திகள்

புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

Makkal Kural Official

ரோம்:

புதிய போப் ஆண்டவர் தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறைகள் 15 முதல் 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி புதிய போப் தேர்வுக்கான ரகசிய நடைமுறைகளை தொடங்குவார்கள். வாடிகனில் உள்ள சிஸ்டைன் ஆலையத்தில் வைத்து இந்த நடைமுறைகள் நடைபெறும். புதிய போப் தேர்வு நடைமுறையில் ஈடுபட்டு இருக்கும் கார்டினல்கள் வெளி உலக தொடர்பு இன்றி இருப்பார்கள்.

ஊடகங்களிடம் மட்டும் இன்றி போன்கள் மூலமாகவும் யாருடனும் தொடர்பில் இருக்க மாட்டார்கள்.

புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடடைபெறும். இந்த நடைமுறைகளுக்கு பின்னர் கருப்பு நிற புகை சிக்னல்கள் வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யபடவில்லை என்பதை குறிக்கும். வெள்ளை நிற புகை குறியீடு வந்தால், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கபடும். அவர் ஏற்றுக்கொண்டால் புதிய போப் ஆக அறிவிக்கப்படுவார். செயிண்ட் பீட்டர் பசிலிகாவில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடும். அதன்பிறகு புதிய போப் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்.

யார் யார்?

புதிய போப்பாக தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார் யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது.

போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது. 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.

வாடிகன் தேவாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ​​ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும். பின்னர் புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார்.

புதிய போப் ரேஸில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விபரம் பின்வருமாறு:

ஜீன்-மார்க் அவெலின், பிரான்ஸ் (66)

ஜீன்-மார்க் அவெலின் டிசம்பர் 26, 1958 அன்று பிரெஞ்சு அல்ஜீரியாவில் உள்ள சிடி பெல் அபேஸில் பிறந்தார். இவருக்கு பதவி கிடைத்தால், முதல் பிரெஞ்சு போப் என்ற பெருமை கிடைக்கும்.

பீட்டர் எர்டோ, ஹங்கேரி (72)

பீட்டர் எர்டோ ஜூன் 25ம் தேதி, 1952ம் ஆண்டு பிறந்தார். இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஐரோப்பாவின் ஆயர் பேரவைகளின் குழுவின் தலைவராகவும், ரோமில் நடந்த ஆயர்களின் ஆயர் பேரவையின் மூன்றாவது பொதுச்சபைக்கான தொடர்பு ஜெனரலாகவும் இருந்தார்.

இவர் 2013ல் நடந்த கடைசி மாநாட்டில், போப் தேர்வில் போட்டியாளராகக் கருதப்பட்டார். 2015ம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் போது, ​​தேவாலயங்கள் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரான்சின் அழைப்பை இவர் எதிர்த்தார்.

மரியோ கிரெச், மால்டா (68)

மரியோ கிரெச் 1957ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி கோசோவின் காலாவில் பிறந்தார்.

இவர் 2020ம் ஆண்டு முதல் ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஜுவான் ஜோஸ் ஓமெல்லா, ஸ்பெயின் (79)

ஜுவான் ஜோஸ் ஒமெல்லா ஒமெல்லா ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஸ்பானிஷ் மதகுரு ஆவார். அவர் கார்டினல்கள் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார்.

பியட்ரோ பரோலின், இத்தாலி (70)

ஜனவரி 17ம் தேதி 1955ம் ஆண்டு பியட்ரோ பரோலின் பிறந்தார். இவர் 2014ம் ஆண்டு முதல் கார்டினல்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார், அதே ஆண்டில் அவர் கார்டினலாக நியமிக்கப்பட்டார்.

இவர் 2013ம் ஆண்டு முதல் பிரான்சிஸின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த பதவி பெரும்பாலும் ‘துணை போப்’ என்று அழைக்கப்படுகிறது.

லூயிஸ் டேகிள், பிலிப்பைன்ஸ் (67)

ஜூன் 21ம் தேதி 1957ம் ஆண்டு லூயிஸ் டேகிள் பிறந்தார். கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பிலிப்பைன்ஸ் மதகுரு ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஆசியாவிலிருந்து முதல் போப்பாக இருப்பார்.

ஜோசப் டோபின், அமெரிக்கா (72)

கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பேராயர் மற்றும் கார்டினல். இவர் 1952ம் ஆண்டு மிச்சிகனில் பிறந்தார். 2013ம் ஆண்டு போப் தேர்வின் போது போட்டியில் முன்னணியில் இருந்தார்.

உலகின் கார்டினல்கள் முதல் அமெரிக்க போப்பைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை.

மைக்கோலா பைச்சோக், உக்ரைன் (45)

உக்ரைனில் பிறந்த மெல்போர்ன் பிஷப் இளம் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கலாம். ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைன் மக்களின் உரிமைகள் குறித்து, இவர் குரல் கொடுத்து வருகிறார்.

4 இந்திய கார்டினல்கள்

புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறையில் 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி ஓட்டு போடுவர்.

ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர்.

அவர்களின் விவரம் வருமாறு;

பிலிப் நேரி பெராவ்; 72 வயதான இவர் கோவா, டாமன் பேராயர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். புலம்பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்.

பசேலியாஸ் கிளிமீஸ்; இவரது இயற்பெயர் ஐசக் தொட்டும்கல், வயது 64. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஸ்தலமாக கொண்ட சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயர். இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001ம் ஆண்டு பிஷப்பான அவர், 2012ல் கார்டினாலானார்.

ஆண்டணி போலா; ஹைதராபாத் பேராயரான இவரின் வயது 63. இந்தியாவில் இருந்து வந்த முதல் தலித் கார்டினல் என்ற வரலாற்றை படைத்தவர். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது.

ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு; இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர் தான் மிகவும் இளையவர். இவரின் வயது 51. உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபையில் ஒரு புதிய தலைமையை பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *