பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள்.
மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.
உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.
உடான் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் புதிய பசுமை விமான நிலையம் உருவாக்கப்படும்.
ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பீகார் மாநில உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.