செய்திகள்

பிஎஸ்எல்வி–சி 54 ராக்கெட்: 26–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டா, நவ. 20–

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26–ந்தேதி பிஎஸ்எல்வி–சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த பிஎஸ்எல்வி–சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்–3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்–6) மற்றும் அமெரிக்காவினுடைய 8 சிறிய வகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன.

இந்த செயற்கைக் கோள் 26–ந்தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *