ஸ்ரீஹரிகோட்டா, நவ. 20–
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26–ந்தேதி பிஎஸ்எல்வி–சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
இந்த பிஎஸ்எல்வி–சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்–3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்–6) மற்றும் அமெரிக்காவினுடைய 8 சிறிய வகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன.
இந்த செயற்கைக் கோள் 26–ந்தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.